என் உயிரின் அத்தனை துளிகளிலும்
கண்ணீராய் வாழும் என் உயிரே
என்னை நிராகரிப்பது உன் உரிமை
நான் மௌனமாய் வெதும்பி நிற்பேன்
வேறொன்றும் செய்வதற்கில்லை
எப்படி வேண்டுமானாலும்
என்னை நீ நிராகரித்துக்கொள்
ஆனால் என் கண்கள் தொடும்
தொலைவிலேயே இரு
உன் மீதான என் பிரியம் என்பது
பைத்தியத்திலும் கேடுகெட்ட
பைத்தியமானது என்பதை அறிவாயா
எனக்குள் அதை ஊட்டிவிட்டவள் நீதானே
நெஞ்சில் எனக்கான அத்தனை
காதலையும் வைத்துக்கொண்டு
நிராகரிப்பதாய் உதடுகளால் நடிக்கிறாய்
ஒன்று மட்டும் புரிந்துகொள்
நீ விரும்பாத எதையும்
நான் விரும்பவும் மாட்டேன்
நீ வாழவே நான் வாழ்வேன்
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
Monday, April 12, 2010
கண்ணீராய் வாழும் என் உயிரே
Posted by MuthuRaj on 1:43 AM

