Monday, April 12, 2010

கவிதை இல்லை.. கவிதை மாதிரி....- Read n feel...

கவிதை இல்லை.. கவிதை மாதிரி....
.
.
.

முன்பொரு மழை காலத்தில் ஒரு நீண்ட உரையாடல்..

டேய்.. உண்மைய சொல்லு, நீ எழுதுனதெல்லாம்
திருடுன கவிதைதானே..?
.

ச்சீ... நானே எழுதுனதுதாண்டி....

அப்டியா...??.

ஆமா..

எப்பலாம் கவிதை எழுதுவ...??.

மழை பெய்யும் போதெல்லாம் உன் ஞாபகம் வரும்...
அப்பலாம் உன்ன நெனச்சு எழுதுவேன்..
.

பார்ரா..!!! சரி, இப்பதான் மழை பெய்யுதே உடனே அழகா
ஒரு கவிதை சொல்லு பாப்போம்..
.

பக்கத்துலயே ரொம்ப அழகா ஒரு கவிதை நிக்கும்போது
இன்னொன்னு எப்டி சொல்றது..???!!!/.

அய்ய... பிளேடு....

போடி....

சரி சொல்லு, என்னலாம் ஞாபகம் வரும் உனக்கு...??.

ம்ம்........ ....................
............... ....................
.

என்னடா..? பயங்கரமா யோசிக்குற..??.

இருடி....

ஹ்ம்... இதான் காலக்கொடும...

சொல்றேன் கேளு...
மழை வரதுக்கு முன்னாடி ஒரு மண் வாசனை வரும் தெரியுமா??
.

ஆமா.

அப்பலாம் உன் தலைமுடி வாசனைதான் ஞாபகம் வரும்.

பாவி, அப்ப என் மண்டைல வெறும் மண்ணுதான் இருக்குன்னு சொல்றியா??
இதெல்லாம் நாங்க திருவிளையாடல் படத்துலயே பாத்துட்டோம்
வேற...??
.

சின்ன சின்னதா மழை தூறும்போது, உன் தெத்துப்பல்
தெரியுறமாதிரி சிரிப்பியே அது ஞாபகம் வரும்...
.

ப்ச்... அப்புறம்...?.

அந்த தூறல் தண்ணில விழும்போதெல்லாம் ஒரு வட்டம் வருமே..,
அதுல உன் கன்னக்குழி ஞாபகம் வரும்..!
.

ப்ச்...ப்ச்... வேற...??.

அதே தூறல் தரைல விழும்போது குட்டி குட்டியா சிதறுமே...
அப்பலாம் நீ அடிக்கடி ஒரு உச் கொட்டுவியே...?
.

ப்ச்....

ஆங்... இதான் இது ஞாபகம் வரும்..

பரவா இல்ல தேறிடுவ....

இடி, இடிக்குறப்பலாம், நா திருட்டு தம் அடிக்குறத பாத்துட்டு
கோவப்பட்டியே... அது ஞாபகத்துக்கு வரும்...
.

அதான் விட்டுடியே...அப்புறம்...??.

நா உன்கிட்ட லவ்வ சொல்றதுக்கு முதல் நாள்,
கண் சிமிட்டிகிட்டே ஒரு சிரிப்பு சிரிச்சியே...,

ம்...ம்...!?.

மின்னல் வரும்போதெல்லாம் அதான் ஞாபகம் வரும்.

அடப்பாவி, அவ்ளோ பயங்கரமாவா சிரிச்சேன்..??!!.

இல்ல.., அதுல ஒரு ஹை-வோல்டேஜ் கரண்ட் பாஸ் ஆச்சு
அதான் அப்டி சொன்னேன்...

ஹ...ஹ...ஹா...

அப்புறம் மழையெல்லாம் விட்டதுக்கு அப்புறம்
ஜில்லுன்னு ஒரு காத்து வீசும் தெரியுமா...?.

ஆமா...

அப்பலாம்.... ............................
....................... .............................

ம்.. சொல்லு....

இல்ல , அது வேணாம் விடு...

ஏன்..?

திட்டுவ.

திட்டமாட்டேன் சொல்லுடா .

நிச்சயமா...?

சத்தியமா.

ம்.... நாம ரெண்டு பேரும் ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருக்குறப்ப ,
சில நேரத்துல நீ உன்னையே மறந்து இந்த மாதிரி உரசிகிட்டு நிப்ப...
அந்த ஸ்பரிசம்தான் ஞாபகம்தான் வரும் .

ச்ச்சீய்ய்.........

என்ன ஆச்சு...?

போடா..

ஓ... வெக்கப்படுரியா ..?

எனக்கும் மழை பெய்யுறப்பலாம் உன் ஞாபகம்தாண்டா வரும்.

ஹை.... எப்டி...???

மழை வரதுக்கு முன்னாடி வானம் கருப்பா ஆகும்ல..?!!
அப்பலாம் கருப்பா இருக்குற நீதான் ஞாபத்துக்கு வருவ..!! ஹ..ஹ..ஹா...

போடி கொரங்கு...

ஹ..ஹ..ஹா...

லூசு....

ஹ..ஹ..ஹா...

அரக்கி...

ஹ..ஹ..ஹா...

ஹி... ஹி...ஹி...

ஹ..ஹ..ஹா...









பிறிதொரு மழை நேரத்தில் ஒரு சிறிய உரையாடல்....
























































































































Sorry, I dont know who u are..?!!!
and.....just I cant remember u. leave me plz...
Bye.....