அன்றொரு நாள்
அதிகாலை நேரம்
ஆழ்ந்த உறக்கம்
கடவுள் வந்து நின்றார்
கண்ணெதிரே என் கனவில்
கேள்விகள் பல கேட்டார்
பிடித்தவர்கள் பெயர் சொல் என்றார்
அம்மா அப்பா பெயர் சொன்னேன்
அமைதியாய் சிந்தித்தார்
அடுத்து சொன்னார்
"எதிர்காலம் நன்றாக இருக்கும்"
கனவுகள் பற்றிக் கேட்டார்
காதலி அவள் பெயர் சொன்னேன்
கண்மூடி தியானித்தார்
"நல்ல வாழ்க்கை அமையும்"
நெடுநாள் ஆசை கேட்டார்
நிலவு தொடும் வரம் கேட்டேன்
கொஞ்சம் தயங்கினார்
"நிச்சயம் நிறைவேறும்"
தொடரும் நட்பு பற்றிக் கேட்டார்
நண்பா உன்பெயர் சொன்னேன்
கேட்டதும் சிரித்தார்
சிறிதும் யோசிக்கவில்லை
உடனே பதில் சொன்னார்
"நீ எல்லாம் எங்கே உருப்படப் போகிறாய்''
Saturday, April 10, 2010
நண்பா
Posted by MuthuRaj on 2:20 AM

